Headlines
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா 5–ம் நாள் காட்சிகள்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா 5–ம் நாள் காட்சிகள்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்
திருவிழா 5–ம் நாள் காட்சிகள்
08-03-2013
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா 5–ம் நாள் நிகழ்ச்சிகள் பின்வருமாறு:-

காலை 4.30 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. காலை 5 மணிக்கு பஞ்சாபிஷேகமும், தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது. காலை 9 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் நிகழ்ச்சி நடந்தது. பகல் 1 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு யானை மீது களப பவனி வருதல் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு அத்தாழபூஜையும், 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் நிகழ்ச்சியும் நடந்தது.
மணவாளக்குறிச்சியில் இருந்து மண்டைக்காடுக்கு சென்ற
பகவதி அம்மன் சிலையுடன் கூடிய அலங்கார வண்டி
மாநாடு நிகழ்ச்சியில் காலை 5 மணிக்கு தேவி மஹாத்மிய பாராயனம் நிகழ்ச்சியும், காலை 8 மணிக்கு பக்தி பஜனையும், 10 மணிக்கு மஹாபாரத தொடர் விளக்க உரையும், நடந்தது. பகல் 12 மணிக்கு சமய மாநாடும், மாலை 3 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும், மாலை 5 மணிக்கு இராமாயணத்தில் விஞ்சி நிற்பது சகொதரபாசமே! வீரமே! என்ற தலைப்பில் பக்தி பட்டிமன்றமும் நடைபெற்றது.
யானை மீது களபம் எடுத்து வந்த காட்சி
மேலும் போட்டோஸ் மற்றும் வீடியோ காட்சிகளுக்கு


We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: