Headlines
Loading...
2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
09-03-2013
தக்கலை அருகே உள்ள பூக்கடை பகுதியைச் சேர்ந்தவர் செபஸ்டின். இவரது மனைவி விஜய புஷ்பராணி (35). இவர்களுக்கு சோபி (11), லெனின் (10) என 2 குழந்தைகள் உள்ளனர். செபஸ்டின் பூக்கடை பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். தற்போது வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். விஜயபுஷ்பராணி தனது குழந்தைகளுடன் இங்கு வசித்தார்.

கடந்த 5-ந் தேதி 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு விஜயபுஷ்பராணி கருங்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதுபற்றி அறிந்த விஜயபுஷ்பராணியின் மாமனார் தேவசிரோன்மணி தக்கலை போலீசில் புகார் செய்தார்.
புகாரில் ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற எனது மருமகள் மற்றும் 2 குழந்தைகளை காணவில்லை. அவர்களை கண்டுபிடித்து தர வேண்டும்” என கூறி உள்ளார். புகார் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் அர்ச்சுனன் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: