Headlines
Loading...
மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் மோட்டர் சைக்கிள் மீது  பேருந்து மோதியதால் திடீர் பரபரப்பு

மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் மோட்டர் சைக்கிள் மீது பேருந்து மோதியதால் திடீர் பரபரப்பு

மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் மோட்டர் சைக்கிள் மீது 
பேருந்து மோதியதால் திடீர் பரபரப்பு 
16-12-2012
மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் நேற்று மாலையில் மோட்டர் சைக்கிள் மீது பேருந்து மோதியதால் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. அம்மாண்டிவிளை பகுதியை சேர்ந்தவர் அண்ணாத்துரை (வயது 50). இவர் தேங்காய் கொப்பரை வியாபாரம் செய்து வருகிறார். இவர் தினமும் அம்மாண்டிவிளையில் இருந்து, மணவாளக்குறிச்சி வழியாக மண்டைக்காடு பகுதிக்கு உலர்ந்த தேங்காய் துண்டுகளை மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்வதாக கூறப்படுகிறது. அதன்படி நேற்றும் அண்ணாத்துரை பை ஒன்றில் உலர்ந்த தேங்காய் துண்டுகளை வைத்து கொண்டு தன்னுடையை மோட்டர் சைக்கிளில் அம்மாண்டிவிளையில் இருந்து மணவாளக்குறிச்சி வழியாக மாலை 4.45 மணி அளவில் சென்று கொண்டிருந்தார். 
அப்போது, தக்கலையில் இருந்து பேருந்து ஒன்று மணவாளக்குறிச்சிக்கு வந்து சின்னவிளை ரோட்டில் திரும்பியது. அதே வேளையில் சந்திப்பு பகுதியை கடந்து அண்ணாத்துரை மோட்டர் சைக்கிளிலும் சென்றபோது, மோட்டர் சைக்கிளின் பின் சக்கரத்தில் பேருந்தின் பின்சக்கரம் மோதி சேதமடைந்தது. உடனே அண்ணாத்துரை சுதாகரித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிவிட்டார். இதனால் அவர் காயமின்றி உயிர் தப்பினார். தொடர்ந்து பேருந்து ஓட்டுனர் மற்றும் அண்ணாத்துரை ஆகியோரிடம் சமரசம் பேசப்பட்டு, அவர்கள் பின்னர் சென்றதாக கூறப்படுகிறது. 
இதனால் சிறிது நேரம் வாகன போக்குவரத்து தடைபட்டது. இதற்கிடையே போலீசாரும் வந்து வாகன போக்குவரத்தை சரிசெய்தனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: