Headlines
Loading...
வெள்ளிச்சந்தை அருகே கொழுந்தியாளை கற்பழித்த வாலிபர் கைது

வெள்ளிச்சந்தை அருகே கொழுந்தியாளை கற்பழித்த வாலிபர் கைது

வெள்ளிச்சந்தை அருகே 
கொழுந்தியாளை கற்பழித்த வாலிபர் கைது
15-12-2012
வெள்ளிச்சந்தை அருகே உள்ள வேம்பனூர் பரப்பு விளையைச் சேர்ந்தவர் உதயகுமார். இவரது மனைவி ராதிகா (வயது 27). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். உதயகுமார் பெங்களூரில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இதனால் ராதிகா தனது குழந்தைகளுடன் தனியாக இருந்தார்.

கடந்த 10-ந்தேதி இரவு உதயகுமாரின் அண்ணன் உறவுமுறை கொண்டவரான கொடுப்பைக்குழியைச் சேர்ந்த சசிகுமார் (40), ராதிகாவின் வீட்டு கதவை தட்டினார். ஏற்கனவே அறிமுகம் ஆனவர் என்பதால் ராதிகா கதவை திறந்தார். வீட்டுக்குள் நுழைந்த சசிகுமார், ராதிகாவின் வாயை பொத்தி அவரை கற்பழித்தார். இதை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டி விட்டு சசிகுமார் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதுபற்றி ராதிகா வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். புகாரில் தனியாக இருந்த தன்னை சசிகுமார் வீடு புகுந்து கற்பழித்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி இருந்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகம்மது வழக்குப்பதிவு செய்து சசிகுமாரை கைது செய்தார்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: