Headlines
கடியப்பட்டணத்துக்கு பஸ் விடக்கோரி கலெக்டரிடம் மனு கொடுக்க திரண்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள்

கடியப்பட்டணத்துக்கு பஸ் விடக்கோரி கலெக்டரிடம் மனு கொடுக்க திரண்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள்

கடியப்பட்டணத்துக்கு பஸ் விடக்கோரி கலெக்டரிடம் மனு கொடுக்க திரண்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள்
12-11-2012
கடியப்பட்டணம் தூய பேதுரு இளைஞர் இயக்கம் சார்பில் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-

கடியப்பட்டணத்தில் இருந்து மணவாளக்குறிச்சி, குளச்சல் மற்றும் நாகர்கோவில் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஏராளமான மாணவ-மாணவிகள் கல்வி கற்று வருகிறார்கள். இதற்காக கடியப்பட்டணத்தில் இருந்து முறையான பஸ் வசதி செய்து தரப்படவில்லை. மினி பஸ்வசதியும் இல்லை. இதனால் தினமும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகிறார்கள்.
குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளிக்கு செல்லாததால் படிப்பும் பாதிக்கப்படுகிறது. எனவே கடியப்பட்டணம் கிராமத்திற்கு உரிய பஸ் வசதி செய்து தரவேண்டும். இவ்வாறு மனுவில் கூறி இருந்தனர். ஏராளமான மாணவ-மாணவிகள் ஒரே நேரத்தில் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: