Headlines
Loading...
மணவாளக்குறிச்சி அருகே ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு

மணவாளக்குறிச்சி அருகே ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு

மணவாளக்குறிச்சி அருகே 
ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு
மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிய திருடனுக்கு வலைவீச்சு
23-11-2012
மணவாளக்குறிச்சி அருகே உள்ள ஆற்றின்கரை பகுதியை சேர்ந்தவர் பென்னட்ராஜ். பெயிண்டராக பணியாற்றுகிறார். இவருடைய மனைவி ஷோபா (வயது 30). அவர் நேற்று மதியம் 1 மணி அளவில் சாத்தன்விளைக்கு சென்று விட்டு வீட்டுக்கு தேவையான பொருட்களை கடையில் வாங்கிக்கொண்டு வீடு செல்ல ஆற்றின்கரை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்.

வீட்டின் அருகே வந்தபோது ரோட்டின் ஓரமாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். ரோட்டில் யாரும் இல்லாமல் ஷோபா தனியாக நடந்து வந்தார். அப்போது எதிர்பாராமல் அந்த நபர் பாய்ந்து வந்து ஷோபாவின் கழுத்தில் கிடந்த 9  பவுன் நகையை பறித்தார். 
இதனால் அதிர்ச்சி அடைந்த ஷோபா தடுக்க போராடி கூச்சல் போட்டார். அதற்குள் திருடன் நகையை பறித்து கொண்டு ஓட்டம் பிடித்தான். ரோட்டில் யாரும் இல்லாததால் அவனை பிடிக்க முடியவில்லை.
சற்று தூரத்தில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், விஜயகுமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிய கொள்ளையனை தேடி வருகின்றனர்.

பட்டபகலில் நடந்த இந்த துணிகர வழிப்பறி சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: