Headlines
கருங்கல் பேரூராட்சி ஊழியர்களை தாக்கியதை கண்டித்து பேரூராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கருங்கல் பேரூராட்சி ஊழியர்களை தாக்கியதை கண்டித்து பேரூராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கருங்கல் பேரூராட்சி 
ஊழியர்களை தாக்கியதை கண்டித்து 
பேரூராட்சி ஊழியர்கள் சங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
22-11-2012
கருங்கல் பேரூராட்சி அலுவலகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருபவர் குமார் மற்றும் சுகாதார பணியாளராக ஜெயந்திரா என்பவரும் பணிபுரிந்து வந்தார். இவர்கள் தங்கள் பணியினை செய்து கொண்டிருந்த போது சமூக விரோதிகள் சிலர் தாக்கியதாக தெரிகிறது. இதனை கண்டித்து கருங்கல் பேரூராட்சி அலுவலகம் முன்பு நேற்று மாலையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பேரூராட்சி, ஊராட்சி சங்க மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை தாங்கினார். பேரூராட்சி, ஊராட்சி சங்க மாநில பொதுசெயலாளர் கனகராஜ் துவக்கவுரையாற்றினார். தொடர்ந்து அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராஜகுமார், அரசு ஊழியர் சங்க கல்குளம் வட்ட செயலாளர் ஜாண்ராஜ், நகராட்சி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.லீடன் ஸ்டோன் ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் அலுவலக பணியாளர்கள் தாக்கியதை கண்டித்து கோஷங்கள் போடப்பட்டன. ஆர்ப்பாட்டம் முடிவில் பேரூராட்சி, ஊராட்சி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரிச்சர்ட் ஹென்றி நன்றி கூறினார்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: