Headlines
வெள்ளிமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 54-வது கந்த சஷ்டி திருவிழா நிகழ்ச்சி

வெள்ளிமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 54-வது கந்த சஷ்டி திருவிழா நிகழ்ச்சி


வெள்ளிமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில்
54-வது கந்த சஷ்டி திருவிழா நிகழ்ச்சி
19-11-2012
மணவாளக்குறிச்சி அருகே உள்ள வெள்ளிமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 54-வது கந்த சஷ்டி திருவிழா நிகழ்ச்சி நவம்பர் 13-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெற்றது. 18-ம் தேதி நடைபெற்ற திருவிழா நிகழ்ச்சியில் சூராசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. அன்று காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நிகழ்ச்சியும், 5.30 மணிக்கு கிரிவலம், 7.30 மணிக்கு தீபாராதனை, காலை 8 மணி பஜனை நிகழ்ச்சியும், 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை சுந்தரபுராண தொடர் விரிவுரையும், பகல் 12.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நாதஸ்வர நிகழ்ச்சியும் நடந்தது.
தொடர்ந்து 2 மணி முதல் மாலை 4 மணி வரை கேரளா புகழ் பாறசாலை திரு. ராஜன் குழுவினர் வழங்கிய "மைலேந்திகாவு" சிங்காரிமேளம் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சுவாமி சூரசம்ஹாரத்திற்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெடர்த்து. மாலை 6.15 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.. தொடர்ந்து 6.30 மணிக்கு அபிஷேகம், 7.30 மணிக்கு தீபாராதனை, 8 மணிக்கு சுவாமி மயில் வாகனத்தில் உலாவருதல் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு 9 மணிக்கு வாணவேடிக்கை காட்சியும் நடைபெற்றன.
சூரசம்ஹார நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: