Headlines
ஏ.வி.எம். கால்வாயில் பாய்ந்த கார்

ஏ.வி.எம். கால்வாயில் பாய்ந்த கார்

ஏ.வி.எம். கால்வாயில் பாய்ந்த கார்
தண்ணீரில் தத்தளித்த 5 பேரை பொதுமக்கள் மீட்டனர்
02-10-2012
மண்டைக்காடு  - குளச்சல் பகுதியில் ரோட்டோரம் ஏ.வி.எம். கால்வாய் செல்கிறது. நேற்று இனயம் புத்தன்துறையை சேர்ந்த ஒரு கார் முட்டம் பகுதியை சேர்ந்த திருமண வீட்டினர் சிலரை ஏற்றிக்கொண்டு குளச்சல் நோக்கி சென்றுகொண்டு இருந்தது. குளச்சல் வெட்டுமடை பகுதியில் செல்லும்போது பின்னால் வந்த ஒரு பஸ் அந்த காரை முந்தி செல்ல முயன்றது. அப்போது அந்த பஸ் கார் மீது உரசியதாகவும், இதில் கார் நிலை தடுமாறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரோட்டோரத்தில் உள்ள ஏ.வி.எம். கால்வாய்க்குள் கார் பாய்ந்ததாக தெரிகிறது.
கால்வாய்க்குள் கார் பாய்ந்ததால் அதிர்ச்சி அடைந்த காரில் இருந்தவர்கள் காப்பாற்றுமாறு அலறினார்கள். இதை அறிந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள், கடற்கரையில் மணல் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் என ஏராளமானவர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் காரில் 5 பேர் தத்தளித்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சிறிது நேரத்தில் அந்த கண்ணாடியை உடைத்து காருக்குள் சிக்கிய 5 பேரையும் அப்பகுதியினர் மீட்டனர். தக்க நேரத்தில் மீட்கப்பட்டதால் காரில் இருந்த 5 பேரும் உயிர்தப்பினர். எனினும் லேசான காயம் அடைந்த அவர்கள் இப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர்.
இந்த சம்பவம் குறித்து குளச்சல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கால்வாய்க்குள் கிடக்கும் காரை மீட்டும் பணியும் நடந்தது.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: