Headlines
திருநயினார்குறிச்சி கறைகண்டேஸ்வர மகாதேவர் கோவில் திருவிழா

திருநயினார்குறிச்சி கறைகண்டேஸ்வர மகாதேவர் கோவில் திருவிழா

திருநயினார்குறிச்சி கறைகண்டேஸ்வர மகாதேவர் கோவில் 
மார்கழி திருவாதிரை திருவிழா

இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள்
காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம் நிகழ்ச்சியும், காலை 6 மணிக்கு மூன்று யானைகளுடன், சந்தணம், பன்னீர், பால்குடம் ஏந்தி வரும் பக்தர்களின் மாபெரும் ஊர்வலம் தொடங்கியது. காலை 8.30 மணிக்கு சிறப்பு பூஜையும், காலை 11 மணிக்கு செதுவூர் சகாதேவனின் வில்லிசை கச்சேரியும் நடந்தது. 
மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார்
கோவிலில்  முதல் பால்குடம் துவங்கி வைக்கும் காட்சிகள்
யானை ஊர்வலம் மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த் பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்டு வடக்கன்பாகம் கோவில், ஆற்றின்கரை காலனி முத்தாரம்மன் கோவில், அம்மாண்டி விளை, வெல்லமடி பொட்டல்குழி கோவில் உள்பட பல கோவில்களுக்கு சென்று, பின்னர் கறைகண்டேஸ்வரம் வந்தடைந்தது. இதற்கு மாவட்ட இந்து முன்னணி அமைப்பாளர் மிசா சோமன்ஜி தலைமை தாங்கினார். 
மணவாளக்குறிச்சியில் இருந்து யானை புறப்பட்ட காட்சி
இரண்டாவது யானை வெள்ளிசந்தை அருள்மிகு முருகன் கோவிலில் இருந்து புறப்பட்டு, ஈத்தங்காடு, கலுங்கடி, சரல் உள்பட பல கோவில்களில் சென்று பின்னர்  கறைகண்டேஸ்வரம் வந்தடைந்தது. இதற்கு. இதற்கு முன்னாள் வெள்ளிசந்தை ஊராட்சி தலைவர் ராஜரெத்தினம் தலைமை தாங்கினார்.
யானை ஊர்வல காட்சி
யானை ஊர்வல வீடியோ காட்சி
மூன்றாவது யானை குருந்தன்கோடு காலனி மகாகணபதி கோவிலில் இருந்து புறப்பட்டு செக்கடிவிளை, வெள்ளிமலை, காருபாறை, மூங்கில்விளை உள்பட பல கோவில்களில் சென்று, பின்னர் கறைகண்டேஸ்வரம் வந்தடைந்தது. 
சகாதேவன் குழுவினரின் வில்லிசை கச்சேரி நிகழ்ச்சி
யானைகள் கோவிலுக்கு வந்த காட்சி
நாதஸ்வர கச்சேரி நிகழ்ச்சி நடந்த காட்சி
சிறப்பு சொற்பொழிவு நடந்த காட்சி
பகல் 1 மணிக்கு மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடந்தது. மாலை 4.30 மணிக்கு நாதஸ்வர கச்சேரி ராஜமேளம் நிகழ்ச்சி நடந்தது. இரவு 7.30 மணிக்கு சத் சங்கம் நிகழ்ச்சி நடந்தது. இரவு 11 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலித்தலும், இரவு 12 மணிக்கு ஸ்ரீ பூதத்தார் சிறப்பு பூஜையும், நடுஇரவு 1 மணிக்கு ஸ்ரீ மகா கால பைரவர் சிறப்பு பூஜையும், தொடர்ந்து இரவு 2 மணிக்கு மாபெரும் வானவேடிக்கை நிகழுவும் நடந்தது.
சுவாமி பவனி வந்த காட்சிகள்
சுவாமி பவனி வந்த வீடியோ காட்சி

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: