Headlines
குமரி மாவட்ட புதிய முதன்மைக்கல்வி அதிகாரி பொறுப்பேற்பு

குமரி மாவட்ட புதிய முதன்மைக்கல்வி அதிகாரி பொறுப்பேற்பு

குமரி மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரியாக பணியாற்றி வந்தவர் ஜெயக்குமார். இவர் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். அதைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்ட மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளராக பணியாற்றி வந்த விஜயராணி பதவி உயர்வு மூலம் குமரி மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரியான நியமனம் செய்யப்பட்டார்.
அவர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள், முதன்மைக்கல்வி அலுவலக அதிகாரிகள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அவர் உயர் அதிகாரிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: