Headlines
படித்த–தொழிற்பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

படித்த–தொழிற்பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
குமரி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 2016–2017–ம் ஆண்டில் படித்த, வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்று தரும் பொருட்டு வேலைவாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. முகாமில் உள்ளூர் மற்றும் சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு போன்ற பெருநகரங்களிலிருந்து பல்வேறு நிறுவனங்கள் கலந்துகொண்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க உள்ளனர்.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நாகர்கோவில் நகராட்சி பகுதிகளை சேர்ந்த 8–ம் வகுப்பு முதல் தொழிற்பயிற்சி, பட்டப்படிப்பு, டிப்ளமோ இன் பார்மஸி, நர்சிங், அனைத்து இளங்கலை மற்றும் முதுகலை (கலை அறிவியல் மற்றும் பொறியியல்) வரை படித்த 40 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் தங்களது கல்விச்சான்றிதழ், சாதி சான்றிதழ், குடும்ப அட்டை, இதர தகுதிச்சான்று (அசல் மற்றும் நகல்) மற்றும் புகைப்படங்களுடன் கலந்துகொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: