Headlines
Loading...
குளச்சல் வர்த்தக துறைமுகம் அமைய தொடர்ந்து பேச்சுவார்த்தை: பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு

குளச்சல் வர்த்தக துறைமுகம் அமைய தொடர்ந்து பேச்சுவார்த்தை: பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு

குளச்சல் வர்த்தக துறைமுகம் அமைய தொடர்ந்து பேச்சுவார்த்தை: பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு
19-08-2015
குளச்சல் அருகே மேற்கு நெய்யூர் சரல் ஸ்ரீபத்திரகாளியம்மன் சுடலைமாட சுவாமி கோவிலில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் கட்டி முடிக்கப்பட்டது. இதனை திறந்துவைத்து மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:–
குளச்சல் வர்த்தக துறைமுகத்திட்டம் நிறைவேற நான் முழுமையாக ஈடுபட்டு வருகிறேன். வருங்கால இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற மற்றும் தொழில் வளர்ச்சிக்கு குளச்சலில் வர்த்தக துறைமுகம் வந்தாக வேண்டும். துறைமுகம் அமைக்க ரூ.25 ஆயிரம் கோடி ஆகும். 25 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும். இதற்காக நான் தொடர்ந்து முயற்சி செய்கிறேன். இதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குளச்சல் துறைமுகத் திட்டத்திற்கு 10 ஆண்டுகளுக்கு ஆய்வு நடந்தது. அதில் சாத்தியகூறுகள் இல்லாமல் இருந்தது. இப்போது சாத்தியகூறுகள் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கான கோப்புகள் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பபட்டுள்ளது. தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. இதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு தரவேண்டும். குமரி மாவட்டத்தில் ரூ.600 கோடி மதிப்பீட்டில் சாலை திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கு கான்சர் சென்டர் கொண்டுவரவும் முயற்சி செய்கிறேன். இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவி வழங்குவதில் பிரச்சனை உள்ளது. பாராளுமன்றத்தில் எல்லா கட்சிகளும் ஒத்துழைப்பு தரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
PayOffers.in

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: