Headlines
Loading...
வெள்ளிச்சந்தையில் மாயமான பள்ளி மாணவர்கள் கன்னியாகுமரியில் மீட்பு

வெள்ளிச்சந்தையில் மாயமான பள்ளி மாணவர்கள் கன்னியாகுமரியில் மீட்பு

வெள்ளிச்சந்தையில் மாயமான பள்ளி மாணவர்கள் கன்னியாகுமரியில் மீட்பு
10-01-2014
வெள்ளிச்சந்தை அரசு மேல்நிலைப்பள்ளியில் சூரப்பள்ளத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ஸ்ரீராம் (வயது 12), செதுவூரை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் அர்ஜூன் (12), ஆலங்கோட்டையை சேர்ந்த அய்யப்பன் மகன் ரமேஷ் (12), வெள்ளிச்சந்தையை சேர்ந்த தனசேகர் மகன் அபினேஷ் (12) ஆகியோர் 7-ம் வகுப்பு படித்து வருகின்றனர். அதேபோல செதுவூரை சேர்ந்த செல்லநாடார் மகன்கள் கிரீஸ் குமார் (13). 8-ம் வகுப்பும், கிரீஸ்வர் (12) 7-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்த மாணவர்கள் 6 பேரும் நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல பள்ளிக்கு சென்றனர். பின்னர் மதிய வேளையில் வீட்டில் சாப்பிடுவதற்காக புறப்பட்டு சென்றனர். அதன்பின்னர் அவர்கள் பள்ளிக்கூடத்திற்கு திரும்பிவரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அந்த மாணவர்கள் அவர்களது வீட்டிற்கும் செல்லவில்லை என்பது தெரியவந்தது. இதற்கிடையே மாணவர்களின் புத்தகம் மற்றும் பைகள் அனைத்தும் வகுப்பறையில் இருந்தன. இதுபற்றி அறிந்ததும் பள்ளி தலைமை ஆசிரியர் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்கு பதிவு செய்து மாயமான 6 மாணவர்களையும் தேடிவந்தார்.
இந்நிலையில் கன்னியாகுமரி கடற்கரையில் நேற்று முன்தினம் மாலையில் பள்ளி சீருடையுடன் சுற்றித்திரிந்த 6 மாணவர்களையும் கன்னியாகுமரி போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வெள்ளிச்சந்தை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசாரும், மாணவர்களின் பெற்றோரும் கன்னியாகுமரிக்கு சென்றனர். பின்னர் போலீசார் அங்கிருந்து மாணவர்களை வெள்ளிச்சந்தைக்கு அழைத்து வந்தனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: