Headlines
Loading...
மணவாளக்குறிச்சி அருகே நகைக்கடை ஊழியர் தற்கொலை

மணவாளக்குறிச்சி அருகே நகைக்கடை ஊழியர் தற்கொலை

மணவாளக்குறிச்சி அருகே நகைக்கடை ஊழியர் தற்கொலை
11-07-2013
மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் தாமஸ்தெருவை சேர்ந்தவர் சகாய ஸ்டீபன் லெனின் (வயது 24). நகைக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக தூக்கமாத்திரை தின்று சகாய ஸ்டீபன் லெனின் மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை உறவினர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 
பின்னர் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சகாய ஸ்டீபன் லெனின் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மணவாளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: