Headlines
Loading...
பெண் பேராசிரியரை கடத்திய மாணவனை போலீஸ் தேடுகிறது

பெண் பேராசிரியரை கடத்திய மாணவனை போலீஸ் தேடுகிறது

பெண் பேராசிரியரை கடத்திய மாணவனை போலீஸ் தேடுகிறது
14-03-2013
கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஒரு பெண் பேராசிரியருக்கு, அவரது கல்லூரியில் படித்த 3 ஆண்டு பாலிடெக்னிக் மாணவன் ஒருவனுடன் காதல் ஏற்பட்டது. கடந்த ஆறு மாதங்களாக அவர்கள் இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இந்த விவரம் பேராசிரியரின் வீட்டிற்கு தெரியவர, இந்த தொடர்பை விட்டுவிட கண்டித்து இருக்கின்றனர். 

இதனால் வெகுண்டு எழுந்த அந்த மாணவன், தனது நண்பர்களுடன் சென்று கூர்மையான ஆயுதங்களால் பேராசிரியரின் பெற்றோரை தாக்கியிருக்கிறான். பின்னர் தயாராக நின்ற காரில், பேராசிரியரை அந்த மாணவன் கடத்தி சென்று இருக்கிறான். 
பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். பேராசியரை கடத்திய மாணவனை போலீசார் தேடிவருகின்றனர். 
<>

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: