Headlines
ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள்

ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள்

ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள்
09-12-2012 
ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் சேவை பொதுமக்கள் அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் தேவை. எனவே ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்களின் சேவையும் மக்களுக்கு இன்றியமையாத ஒன்றாகும்.

ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் செய்யும் ஓட்டுனர் தொழிலும் ஒரு பொதுச் சேவையாகும். இரவு பகலாக அவர்கள் விழித்திருந்து அன்றாடம் உதவுவது பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகும்.

ஆட்டோ மற்றும் டாக்ஸி சேவை இரவு நேரங்களில் கால தாமதமாக பஸ்களில் வந்து இறங்கும் பயணிகளுக்கு மிகவும் உதவியாக உள்ளது. இரவு நேர பஸ்கள் இல்லாத ஊர்களுக்கு பாதுகாப்பாக செல்ல உதவுவது ஆட்டோ மற்றும் டாக்ஸிகளே.

ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் இரவிலும் தூங்காமல் விழித்திருந்து செயல் படுவதால் தான், இரவு நேர பயணிகளுக்கு உதவ முடிகிறது. மழைகாலங்களிலும் இவர்களின் சேவை மிகவும் பாராட்டப்பட வேண்டியதாகும்.

ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்களுக்கு பொதுச் சேவைக்காக, தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது நமது அரசின் கடமையாகும். கழிப்பிடம், இல்லாத இடங்களில் கழிப்பிடமும், ஓய்வறைகளும் கட்டாயம் கட்டி கொடுக்கப்பட வேண்டும்.
ஆட்டோ மற்றும்  டாக்ஸிகள் வெயில் காலங்களில், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கடுமையான வெயிலில் நிற்க வேண்டியுள்ளது. ஓட்டுனர்களும் வாகனங்களுக்கு உள்ளேயே அமர வேண்டி உள்ளதால் கடுமையான சூடு அவர்களை தாக்குகிறது. இதனால் பல நோய்கள் வருவதுடன், விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்களின் நல்வாழ்வையும் கருத்தில் கொண்டு, அவர்களுக்கும் குடும்பம் பிள்ளைகள் உண்டு என்பதையும் நினைவில் நிறுத்தி, அவர்களும் இந்தியர்களே என்ற மேலான எண்ணத்துடன் அரசு செயல்பட வேண்டியது கட்டாயமானதாகும்.
எனவே நாட்டிலுள்ள எல்லா ஆட்டோ மற்றும் டாக்ஸி நிறுத்தங்களிலும் வெயிலுக்கு பாதுகாப்பாக கூரை அமைக்கப்பட வேண்டும். கழிப்பிடம் இல்லாத இடங்களில் கழிப்பிடம் கட்டிக் கொடுக்கப்பட வேண்டும். ஓய்வு அறை இல்லாத நிறுத்தங்களில் ஓய்வு அறை கட்டிக் கொடுக்கப்பட வேண்டும், என ஓட்டுனர்களின் நலனில் அக்கரை கொண்ட விக்டரி கட்சி அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

என்றென்றும் மகிழ்வுடன்ஸ்ரீஹரி
இந்தியன் விக்டரி பார்ட்டி

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: