Headlines
மணவாளக்குறிச்சி - தருவையை சேர்ந்த  வாலிபர் மீது அரசு பேருந்து மோதி படுகாயம்

மணவாளக்குறிச்சி - தருவையை சேர்ந்த வாலிபர் மீது அரசு பேருந்து மோதி படுகாயம்

மணவாளக்குறிச்சி - தருவையை சேர்ந்த 
வாலிபர் மீது அரசு பேருந்து மோதி படுகாயம்
07-12-2012
மணவாளக்குறிச்சி - தருவையை சேர்ந்த வாலிபர் மீது அரசு பேருந்து மோதியதில்  வாலிபர் படுகாயம் அடைந்தார். 

மணவாளக்குறிச்சி அருகே உள்ள தருவை பகுதியை சேர்ந்தவர் சத்தியசீலன். இவருடைய மகன் ராம் (வயது 28). இவர் தினமும் அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொள்வார். அதேபோல் இன்று காலை 5.30 மணி அளவில் ராம் மற்றும் அப்பகுதியை சேர்ந்த சிலருடன் மணவாளக்குறிச்சியில் இருந்து ரோட்டின் ஓரமாக நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது மின்தடை ஏற்பட்டு இருந்தது.

இந்நிலையில் நாகர்கோவிலில் இருந்து குளச்சல் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து தருவை மெயின் ரோடு அருகே வரும் போதும், ரோட்டின் ஓரத்தில் சென்று கொண்டிருந்த ராம் மீது கண் இமைக்கும் நேரத்தில் மோதியது. இதில் ராம் தூக்கி வீசப்பட்டு அருகில் இருந்த மதில் சுவர் மீது மோதி கீழே விழுந்தார்.
இதில் ராம் தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தவர்கள் விரைந்து வந்து, காயம் அடைந்த ராமை மீட்டு, நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: