Headlines
மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் போதையில் தள்ளாடிய மூத்தக்குடிமகன்கள்

மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் போதையில் தள்ளாடிய மூத்தக்குடிமகன்கள்

மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில்
போதையில் தள்ளாடிய மூத்தக்குடிமகன்கள்
12-12-2012
மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் நேற்று மாலை போதையில் தள்ளாடிய குடிமகன்களால் பரபரப்பு ஏற்பட்டது.
மணவாளக்குறிச்சி சந்திப்பில் நேற்று மாலை 5 மணி அளவில் முதியவர் வந்து நடந்து வந்து கொண்டிருந்தார். வந்தவர் ரோட்டோரத்தில் நின்ற மின்கம்பத்தை பிடித்து கொண்டு நின்றார். திடீரென கீழே 'தொபுக்கடீரென' விழுந்தார். பின்னர் தள்ளாடியபடி நடு ரோட்டிற்கு வந்தார். மீண்டும் கீழே விழுந்தார். அப்போது அவர் கையில் இருந்த பையில் இருந்து ஒரு குவார்டர் பாட்டில் கீழே விழுந்து நொறுங்கியது.
உடனே, சிலர் ஓடிவந்து அவரை எழுப்பி ரோட்டின் ஓரத்தில் தூக்கி வந்து இருக்க வைத்தனர். கீழே விழுந்ததில் போதை ஆசாமியின் கண்ணின் மேற்பகுதியில் சிறிது காயம் அடைந்து இரத்தம் வடிந்தது. அவருக்கு இரத்தம் வருவது பற்றி கவலை இல்லை. ரோட்டில் விழுந்து உடைந்த குவார்டர் பாட்டில் மீதே மிகுந்த கவலையில் இருந்தார்.

இந்நிகழ்ச்சியை பள்ளிக்கூடம் விட்டு வந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பார்த்துகொண்டிருந்தனர். 
சற்று நேரத்தில் மற்றொரு போதை ஆசாமி அதே இடத்திற்கு வந்து, தள்ளாடியபடி ஏற்கனவே கீழே விழுந்து ரோட்டோரத்தில் இருந்த குடிமகனை பார்த்து கொண்டிருந்தார். என்ன நடந்ததோ தெரியவில்லை இவரும் போதை தலைக்கேறி அதே இடத்தில் மல்லாக்க விழுந்தார். 
இதைப்பார்த்த பொதுமக்களுக்கு சிரிப்பு தான் வந்தது. இரண்டு போதை ஆசாமிகளும் மணவாளக்குறிச்சி மைய பகுதியில் விழுந்து உரண்டு, புரண்டதை கண்டு நேற்று மாலையில் அப்பகுதி மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: