Headlines
வெள்ளிசந்தை அருகே இளம்பெண்ணை ஏமாற்றி கற்பழித்த வாலிபர் கைது

வெள்ளிசந்தை அருகே இளம்பெண்ணை ஏமாற்றி கற்பழித்த வாலிபர் கைது

வெள்ளிசந்தை அருகே இளம்பெண்ணை ஏமாற்றி 
கற்பழித்த வாலிபர் கைது
21-11-2012
வெள்ளிசந்தை அருகே உள்ள சாந்தபுரத்தை சேர்ந்தவர் தங்கம். (வயது 20). (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) இவர் அனந்த நாடார் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வலை கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கோதவிளையை சேர்ந்தவர் தவசுமுத்து (29). தச்சு தொழிலாளி. தங்கத்துக்கும் தவசுமுத்துவுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்கள் இருவரும் கடந்த 3 வருடமாக காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி இரவு தவசு முத்து தனது வீட்டுக்கு காதலி தங்கத்தை அழைத்து சென்றார். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்தனர். அதன்பின்பு தங்கத்தை பார்ப்பதை தவசுமுத்து தவிர்த்தார். அவரை தொடர்பு கொள்ள முயன்றாலும் முடியவில்லை. இதனால் மனம் உடைந்த தங்கம் காதலன் தவசுமுத்துவை தேடி சென்றார். அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். அதற்கு தவசுமுத்து மறுத்து விட்டார்.
அதிர்ச்சி அடைந்த தங்கம் இதுபற்றி வெள்ளிசந்தை போலீசில் புகார் செய்தார். அதில், தன்னை தவசுமுத்து அவரது வீட்டுக்கு ஏமாற்றி அழைத்து சென்று பலாத்காரம் செய்து விட்டார். இதனால் தான் கற்பை இழந்து விட்டதாகவும் இதற்கு காரணமான தவசுமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். வெள்ளிசந்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கேஸ்வரன், சப்-இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது ஆகியோர் விசாரணை நடத்தி தவசுமுத்து மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: