Headlines
இரணியலில் ஸ்டவ் மீது தவறி விழுந்த பெண் உடல் கருகி சாவு

இரணியலில் ஸ்டவ் மீது தவறி விழுந்த பெண் உடல் கருகி சாவு

இரணியலில் ஸ்டவ் மீது தவறி விழுந்த பெண் உடல் கருகி சாவு
14-11-2012
இரணியல் புத்தன் தெருவைச் சேர்ந்தவர் மோகனகுமார். இவரது மனைவி நிர்மலா (வயது 48). இந்த தம்பதிக்கு திருமணமாகி 21 வருடம் ஆகிறது. குழந்தைகள் இல்லை. நேற்று மாலை நிர்மலா வீட்டில் ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக அடுப்பு தீ மளமளவென எரிந்தது. இதனால் அருகில் இருந்த கியாஸ் சிலண்டரில் தீ பிடித்து விடக்கூடாது என்ற பதட்டத்தில் எரியும் ஸ்டவ்வை வீட்டுக்கு வெளியே தூக்கிக் கொண்டு நிர்மலா ஓடினார்.
அப்போது எதிர்பாராத விதமாக எரியும் ஸ்டவ்வோடு நிர்மலா கால் தவறி விழுந்தார். இதில், அவரது உடலில் தீ பிடித்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்களும் அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்தனர். 108 ஆம்புலன்சு மூலம் நிர்மலாவை நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இரவு நிர்மலா பரிதாபமாக இறந்து போனார். இதுபற்றி இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: